Saturday, May 26, 2012

ஊரோடிய கதைகள் - கோவா -3

விடுதி வாசலில் எங்கள் மூவரையும் இறக்கிவிட்டு நண்பர்களோடு நகர்ந்த வாகன இரைச்சல் அடங்கிய போது மனம் சத்தமிட தொடங்கியிருந்தது! தனக்கு தானே சட்டமிட்டு கொள்வதிலும், பின்பு அதற்காக தன்னுள்ளேயே சத்தமிட்டு கொள்வதிலும் மனதிற்கு நிகரேதுமில்லை! களைப்பு ஒரு புறமும், கட்டுப்பாடுகள் மறுபுறமும் கடிவாளம் போட்டு வைத்திருந்த மனது படுக்கைக்கு போனதும் தறிகெட்டு ஓடத் தொடங்கியது! தொலைகாட்சி அலைவரிசையில் ஆசுவாசம் செய்து கொள்ள முயன்று கொண்டிருக்கையில் அலைபேசி அழைப்பு!

Friday, May 18, 2012

மே பதினேழு!


மே பதினேழு! உலக வரலாற்றில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் காட்டுமிராண்டிதனத்தையும், அரச பயங்கரவாதத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருக்க வேண்டிய நாள்! ஆனால் ஏனோ அது நடக்கவில்லை என்றே படுகிறது! முதலாளித்துவ பொருளாதார உலகில் மிகவும் அதிகமாக மதிக்கப்படும் "தனி மனித உரிமை" தான் மிக அதிகமாக மறுக்கப்பட்ட ஒன்றும் கூட! ஹிட்லர் பேசிய அதே தேசியவாதம் அரிதாரம் பூசிக்கொண்டு தேசபற்று என்ற பெயரில் பல்லிளிகின்றது. தேசத்தின் பெயரில் செய்யபடும் கொலைகளும், தேசத்திற்காகவென கொடுக்கப்படும் உயிர்களும் நேரெதிர் திசையில் நின்று கொண்டு ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன.

Thursday, May 10, 2012

ஊரோடிய கதைகள் - கோவா -2

செங்கல் ஏற்றிய சரக்குந்துகளில் சிவப்பு நிற அழுக்கு துண்டை விரித்து கையை தலையணையாக்கி பாதைகளின் மேடு பள்ளம், சுட்டெரிக்கும் வெயில் என ஏதும் அறியாது உறங்கியபடியே பயணிக்கும் கூலிகளை பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். எப்படி உறங்க முடிகிறது இவர்களால் என்ற ஆச்சரியகுறியுடனான கேள்விக்குறி எழ பலமுறை பதில் தெரியாது விழித்திருக்கிறேன்.

Sunday, May 06, 2012

ஊரோடிய கதைகள் - கோவா - 1

வாழ்கையை பயணமாக பார்ப்பவர்கள், வாழ்க்கையே பயணமாகி போனவர்கள் என்ற மனிதர்களுக்கு இடையே "பயணங்களில் வாழ்கையை படிப்பவன் நான்" என்ற சுயவிளம்பரத்தோடு இந்த பதிவை தொடங்குகிறேன்! அரை காத தூரமோ, ஆயிரம் மைல் பயணமோ, எல்லா பாதைகளும் எனக்கான பாடங்களை கொண்டே சமைக்கப்பட்டிருப்பதாக எண்ணிக் கொள்வேன்! அத்தகைய ஒரு சமீபத்திய பயணத்தின் அனுபவமே இந்த பதிவு.