கூடங்குளம் - இன்று தமிழகத்தில் மக்களை இருவேறு தளத்தில் சம பலத்துடன் நிறுத்தியிருக்கும் ஒரு விடயம்.
ஒரு புறம் மின்சாரம் வேண்டியும், இழந்த தம்
பொருளாதார நலன்களை மீட்டெடுக்க வேண்டியும் இந்திய அரசையும், விஞ்ஞானிகளையும், அறிவியலையும் நம்பி இந்த திட்டத்தை ஆதரிக்கும் ஒரு சாரார்.
மறுபுறம் இருக்கும் தம் வாழ்வாதாரத்தை தக்கவைத்து கொள்ளவும், தங்கள் சந்ததிகளை கதிரியக்க பாதிப்பில் இருந்து காக்கவும், இறைவன் , இந்திய அரசு, அதன் உறுதிமொழிகள், விஞ்ஞானிகளின் அறிக்கைகள் என எல்லாத்தையும் மறுதலித்து இந்த திட்டத்தை தீவிரமாக எதிர்க்கும் மறு சாரார்.
ஒரு முன்னோட்டம் பார்த்துவிட்டு மேற்செல்லலாம்.