Saturday, March 31, 2012

கூடங்குளம் - அமுதசுரபியா ? ஆலகாலமா ?

கூடங்குளம் - இன்று தமிழகத்தில் மக்களை இருவேறு தளத்தில் சம பலத்துடன் நிறுத்தியிருக்கும் ஒரு விடயம். 

ஒரு புறம் மின்சாரம் வேண்டியும், இழந்த தம்  பொருளாதார நலன்களை மீட்டெடுக்க வேண்டியும் இந்திய அரசையும், விஞ்ஞானிகளையும், அறிவியலையும் நம்பி இந்த திட்டத்தை ஆதரிக்கும் ஒரு சாரார்.

மறுபுறம் இருக்கும் தம் வாழ்வாதாரத்தை தக்கவைத்து கொள்ளவும், தங்கள் சந்ததிகளை கதிரியக்க பாதிப்பில் இருந்து காக்கவும், இறைவன் , இந்திய அரசு, அதன் உறுதிமொழிகள், விஞ்ஞானிகளின் அறிக்கைகள் என எல்லாத்தையும் மறுதலித்து இந்த திட்டத்தை தீவிரமாக எதிர்க்கும் மறு சாரார்.

ஒரு முன்னோட்டம் பார்த்துவிட்டு மேற்செல்லலாம்.

Sunday, March 18, 2012

ஏன் வேண்டும் ஈழம்-2


முந்தைய பதிவில் சொன்னது போல "ஈழம்" என்பது வரலாறு முழுக்க தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட விடயமே. ஒன்றாய் சேர்ந்து வாழ வரலாறு நெடுக கடந்த ஐம்பது ஆண்டுகளை தவிர எந்த காலத்திலும் தமிழர்கள் மறுக்கவில்லை. எல்லைகோடுகள் இல்லாத அவரவர் பூர்வீக நிலங்களில் வாழும் உரிமை மறுக்கப்படுகின்ற போது வேலி போட்டுகொண்டு வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் மீது பயங்கரவாதம் என்ற முத்திரை எளிதாக குத்தப்பட்டுவிடுகிறது

அரச பயங்கரவாதம் என்பது சட்ட ஒழுங்காய் பரிணாமம் பெறுகையில் "மூச்சு"விடுவது கூட "புரட்சி குரல்" என்று வியாக்கியானப்படுகிறது.