Sunday, August 19, 2012

போகிற போக்கில்...

வெகுநாளாகிவிட்டது  பதிவெழுதி, ஏதேனும் எழுதி என்னுள் எழுந்து , குப்பையாய் நிறைந்து கிடக்கும் எண்ணத்தை எல்லாம் கூட்டிப்பெருக்கி வெளியில் கொட்டினால் தான் புதிய எண்ணங்கள் பிறக்க இடமேற்படும் என்ற யோசனையில் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

"அசாம் கலவரத்தை பற்றியெல்லாம் யாரும் அறச்சீற்றம் கொள்வதில்லையே, ஏன்?"
"தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வருதாமே?" 
"வெலிக்கடை சிறை படுகொலை நாள் யார் நினைவையும் எட்டாமல் போனதே?"
"தென்னை மரத்தில் தேள் கொட்டினால் கதையாக, பூனேயிலும் பெங்களூருவிலும் வடகிழக்கு இந்தியன் அடிவாங்குகிறானே?"
"மதுபானக்கடை படம் நல்லாயிருக்காமே?"
"சன்னி லியோன் கவர்ச்சி நடிகை என்றுதானே இன்னும் சிலர் எண்ணி கொண்டிருகிறார்கள்?" 
"தமிழ்நாட்டுல இருந்து ஒலிம்பிக்குக்கு யாருமே போகலையாமே?"