Monday, November 19, 2012

வலை தள வலை - 1


*பிரபல பாடகியின் புகாரின் பேரில் பிரபல தமிழ் ட்விட்டர் கைது.
*கார்த்தி சிதம்பரத்தின் புகாரின் பேரில் ட்விட்டர் பயனீட்டாளர் கைது.
*பால்தாக்ரே இறப்பு பற்றி பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இரண்டு பெண்கள் கைதாகி பிணையில் விடுதலை.


 

செய்திகளில் அதிகம் அடிபடுகிறது டிவிட்டரும் பேஸ்புக்கும். இணைய சூழல் பற்றி அறியாத தின நாளிதழ்களின் நீள-அகலங்களில் உலகை எடை போடும் எவரும் ட்விட்டரை  / பேஸ்புக்கை குசும்புக்காரர்களின் / விட்டேத்திகளின் கடைசி புகலிடமாக புரிந்துகொள்கிறார்கள். இதில் படித்தவர், படிக்காதவர் என்ற பேதமில்லை.