Monday, November 19, 2012

வலை தள வலை - 1


*பிரபல பாடகியின் புகாரின் பேரில் பிரபல தமிழ் ட்விட்டர் கைது.
*கார்த்தி சிதம்பரத்தின் புகாரின் பேரில் ட்விட்டர் பயனீட்டாளர் கைது.
*பால்தாக்ரே இறப்பு பற்றி பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இரண்டு பெண்கள் கைதாகி பிணையில் விடுதலை.


 

செய்திகளில் அதிகம் அடிபடுகிறது டிவிட்டரும் பேஸ்புக்கும். இணைய சூழல் பற்றி அறியாத தின நாளிதழ்களின் நீள-அகலங்களில் உலகை எடை போடும் எவரும் ட்விட்டரை  / பேஸ்புக்கை குசும்புக்காரர்களின் / விட்டேத்திகளின் கடைசி புகலிடமாக புரிந்துகொள்கிறார்கள். இதில் படித்தவர், படிக்காதவர் என்ற பேதமில்லை. 

Friday, October 12, 2012

ஊரோடிய கதைகள் - கோவா -5

களைப்பாக உறங்கப் போகும் அத்தனை இரவுகளும் எனக்கு விரைவாகவே விடிந்து கொள்ளும்! அதற்கு பின் உறங்கப்பிடிக்காது! அன்றும் அப்படித்தான்! தூக்கம் என்பது உண்மையில் ஒரு தவம். எல்லாருக்கும் வாய்த்துவிடுவதில்லை அது. 

Thursday, October 11, 2012

கூடங்குளம் - Brainstorming with @writercsk

சரவகார்த்திகேயன் அவர்கள் டிவிட்டரில் பகிர்ந்த "கூடங்குளம்" பற்றிய  உறலி ஒன்றிற்கு விளக்கம் கேட்டு நான் எழுதிய டிவிட்லாங்கரை பெரிதும் மதித்து நேரம் ஒதுக்கி, தன் வலைபக்கத்தில் ஒரு பக்கம் ஒதுக்கி எனக்கு பதில் தந்திருந்தார். 

Sunday, August 19, 2012

போகிற போக்கில்...

வெகுநாளாகிவிட்டது  பதிவெழுதி, ஏதேனும் எழுதி என்னுள் எழுந்து , குப்பையாய் நிறைந்து கிடக்கும் எண்ணத்தை எல்லாம் கூட்டிப்பெருக்கி வெளியில் கொட்டினால் தான் புதிய எண்ணங்கள் பிறக்க இடமேற்படும் என்ற யோசனையில் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

"அசாம் கலவரத்தை பற்றியெல்லாம் யாரும் அறச்சீற்றம் கொள்வதில்லையே, ஏன்?"
"தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வருதாமே?" 
"வெலிக்கடை சிறை படுகொலை நாள் யார் நினைவையும் எட்டாமல் போனதே?"
"தென்னை மரத்தில் தேள் கொட்டினால் கதையாக, பூனேயிலும் பெங்களூருவிலும் வடகிழக்கு இந்தியன் அடிவாங்குகிறானே?"
"மதுபானக்கடை படம் நல்லாயிருக்காமே?"
"சன்னி லியோன் கவர்ச்சி நடிகை என்றுதானே இன்னும் சிலர் எண்ணி கொண்டிருகிறார்கள்?" 
"தமிழ்நாட்டுல இருந்து ஒலிம்பிக்குக்கு யாருமே போகலையாமே?"

Thursday, July 19, 2012

கோவை - சென்னை : கவுஹாத்தி தொடர்வண்டிப் பயணம்

ஊரோடிய கதைகளில் சொன்னது போல் "அலுவல்கள் சாராத என் பயணங்கள் எதுவும் பயணிக்கத் தொடங்கும் கடைசி நொடி வரை நிச்சயமற்றதே" என்ற மெய்வாக்கை பொய்யாக்கியே தீருவது என்ற பெருமுயற்சியோடு, ஒரு வியாழக்கிழமை IRCTC Tatkal பயணச்சீட்டு முன்பதிவு செய்ய பல் விளக்கியபடி கணினி முன்னால் அமர்ந்திருந்தேன். IRCTC "cache" மூலமே பெரிதும் இயங்குவதால் எல்லாப் பக்கங்களையும் முன்னமே ஒரு எட்டு எட்டிப்பார்த்து  வைத்திருந்தேன். வெள்ளிக்கிழமை கோவை பயணம். முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வது தான் பெரிதும் பிடிக்கும் என்றாலும், மனது இப்போதெல்லாம் "சௌகரியம்" பார்க்க தொடங்கிவிடுகிறது. புறச் சூழலை அலட்சியப்படுத்திவிட்டு வாழ்வதென்பது "பேச்சிலர்" வாழ்வின் இறுதிகாலத்தில் முடிந்தேவிடுகிறது.

Tuesday, July 17, 2012

ஊரோடிய கதைகள் - கோவா -4

கடற்கரைக்கு சென்றுவிட்டு கப்பல் பயணம் செய்யாமல் வருவதென்பது காதலிக்கு "சைவ முத்தம்" கொடுப்பது போல, நல்லவேளையாக நான் அசைவம்! களைத்துப்போன உடலுக்கு கப்பல் பயணம் ஏற்றதல்ல என்றாலும் ஒருநாள் கூத்துக்கு இந்த வியாக்கியானம் எல்லாம் சரிப்பட்டு வராது என்பதால் துணிந்து கிளம்பிவிட்டோம். நாங்கள் ஏறியது தான் அன்றைய இரவின் இறுதி கப்பல் பயணம். தலைக்கு 200 ரூ. என அரைமணி நேர பயணம், ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டம் முகாந்திரமாய். வேண்டா வெறுப்பாக சுவையாரமற்றுதான் தொடங்கியது இந்த பயணம், அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று உடற்சோர்வு, மற்றொன்று இறுதி பயணமாதலால் யுவதிகள் வெகு குறைவு.


Sunday, June 24, 2012

பள்ளிக்கரணை - சதுப்பு நிலக்காடு

நாம் பயணிக்கும் பாதை ஒருநாளும், ஒருநாள் போல் மற்றொருநாள் இருப்பதில்லை. கவனிக்க யாருமற்று, எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

அலுவலகம் பயணிக்கும் பாதையொன்றில் நிகழ்ந்த அனுபவம் தான் இந்த கட்டுரையின் தொடக்கம்.

பள்ளிக்கரணை - துரைப்பாக்கம் இணைப்புச்சாலை - அலுவலகம் செல்ல ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் பாதை, "சதுப்பு நில வனப்பகுதி" "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி" போன்ற அறிவிப்பு பலகைகளும் "பறவைகள் வாழிடம் -இங்கு குப்பை கொட்டாதீர்கள்"

Saturday, May 26, 2012

ஊரோடிய கதைகள் - கோவா -3

விடுதி வாசலில் எங்கள் மூவரையும் இறக்கிவிட்டு நண்பர்களோடு நகர்ந்த வாகன இரைச்சல் அடங்கிய போது மனம் சத்தமிட தொடங்கியிருந்தது! தனக்கு தானே சட்டமிட்டு கொள்வதிலும், பின்பு அதற்காக தன்னுள்ளேயே சத்தமிட்டு கொள்வதிலும் மனதிற்கு நிகரேதுமில்லை! களைப்பு ஒரு புறமும், கட்டுப்பாடுகள் மறுபுறமும் கடிவாளம் போட்டு வைத்திருந்த மனது படுக்கைக்கு போனதும் தறிகெட்டு ஓடத் தொடங்கியது! தொலைகாட்சி அலைவரிசையில் ஆசுவாசம் செய்து கொள்ள முயன்று கொண்டிருக்கையில் அலைபேசி அழைப்பு!

Friday, May 18, 2012

மே பதினேழு!


மே பதினேழு! உலக வரலாற்றில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் காட்டுமிராண்டிதனத்தையும், அரச பயங்கரவாதத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருக்க வேண்டிய நாள்! ஆனால் ஏனோ அது நடக்கவில்லை என்றே படுகிறது! முதலாளித்துவ பொருளாதார உலகில் மிகவும் அதிகமாக மதிக்கப்படும் "தனி மனித உரிமை" தான் மிக அதிகமாக மறுக்கப்பட்ட ஒன்றும் கூட! ஹிட்லர் பேசிய அதே தேசியவாதம் அரிதாரம் பூசிக்கொண்டு தேசபற்று என்ற பெயரில் பல்லிளிகின்றது. தேசத்தின் பெயரில் செய்யபடும் கொலைகளும், தேசத்திற்காகவென கொடுக்கப்படும் உயிர்களும் நேரெதிர் திசையில் நின்று கொண்டு ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன.

Thursday, May 10, 2012

ஊரோடிய கதைகள் - கோவா -2

செங்கல் ஏற்றிய சரக்குந்துகளில் சிவப்பு நிற அழுக்கு துண்டை விரித்து கையை தலையணையாக்கி பாதைகளின் மேடு பள்ளம், சுட்டெரிக்கும் வெயில் என ஏதும் அறியாது உறங்கியபடியே பயணிக்கும் கூலிகளை பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். எப்படி உறங்க முடிகிறது இவர்களால் என்ற ஆச்சரியகுறியுடனான கேள்விக்குறி எழ பலமுறை பதில் தெரியாது விழித்திருக்கிறேன்.

Sunday, May 06, 2012

ஊரோடிய கதைகள் - கோவா - 1

வாழ்கையை பயணமாக பார்ப்பவர்கள், வாழ்க்கையே பயணமாகி போனவர்கள் என்ற மனிதர்களுக்கு இடையே "பயணங்களில் வாழ்கையை படிப்பவன் நான்" என்ற சுயவிளம்பரத்தோடு இந்த பதிவை தொடங்குகிறேன்! அரை காத தூரமோ, ஆயிரம் மைல் பயணமோ, எல்லா பாதைகளும் எனக்கான பாடங்களை கொண்டே சமைக்கப்பட்டிருப்பதாக எண்ணிக் கொள்வேன்! அத்தகைய ஒரு சமீபத்திய பயணத்தின் அனுபவமே இந்த பதிவு. 

Monday, April 23, 2012

நீரும் தமிழரும் - 5

முந்தைய பதிவில் நீரை பொறுத்த வரை தனி மனித செயல்பாடுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றி பார்த்தோம்! இன்னும் ஏராளமான வழிமுறைகள் இருக்கலாம், அவையெல்லாம் Water Conservation Manuals ஏதேனும் இருந்தால் அதிலிருந்து கிடைக்ககூடும். கொஞ்சம் நீங்கள் ஆர்வத்துடன் முயன்றால் "கூகுளாண்டவர்" தேடித்தருவார் என்ற நம்பிக்கையில், இந்த பதிவில் சமூக/குழு வடிவில் செய்யவேண்டிய நீர் பாதுகாப்பு, நீராதார பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் அழிந்துபட்ட/ஆக்கிரமிக்கப்பட்ட நீராதாரங்களை மீட்டெடுப்பது தொடர்பானவை பற்றி அலசுவதாகத்தான் முன்னம் எண்ணியிருந்தேன்! ஆனால் சமீபத்தில் படிக்க நேர்ந்த ஒரு சட்ட முன் வடிவு இந்த பதிவை வேறு திசையில் திருப்பியிருக்கிறது! அது என்னவெனில் இந்திய அரசின், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் "DRAFT NATIONAL WATER POLICY (2012)" தான்.

Saturday, March 31, 2012

கூடங்குளம் - அமுதசுரபியா ? ஆலகாலமா ?

கூடங்குளம் - இன்று தமிழகத்தில் மக்களை இருவேறு தளத்தில் சம பலத்துடன் நிறுத்தியிருக்கும் ஒரு விடயம். 

ஒரு புறம் மின்சாரம் வேண்டியும், இழந்த தம்  பொருளாதார நலன்களை மீட்டெடுக்க வேண்டியும் இந்திய அரசையும், விஞ்ஞானிகளையும், அறிவியலையும் நம்பி இந்த திட்டத்தை ஆதரிக்கும் ஒரு சாரார்.

மறுபுறம் இருக்கும் தம் வாழ்வாதாரத்தை தக்கவைத்து கொள்ளவும், தங்கள் சந்ததிகளை கதிரியக்க பாதிப்பில் இருந்து காக்கவும், இறைவன் , இந்திய அரசு, அதன் உறுதிமொழிகள், விஞ்ஞானிகளின் அறிக்கைகள் என எல்லாத்தையும் மறுதலித்து இந்த திட்டத்தை தீவிரமாக எதிர்க்கும் மறு சாரார்.

ஒரு முன்னோட்டம் பார்த்துவிட்டு மேற்செல்லலாம்.

Sunday, March 18, 2012

ஏன் வேண்டும் ஈழம்-2


முந்தைய பதிவில் சொன்னது போல "ஈழம்" என்பது வரலாறு முழுக்க தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட விடயமே. ஒன்றாய் சேர்ந்து வாழ வரலாறு நெடுக கடந்த ஐம்பது ஆண்டுகளை தவிர எந்த காலத்திலும் தமிழர்கள் மறுக்கவில்லை. எல்லைகோடுகள் இல்லாத அவரவர் பூர்வீக நிலங்களில் வாழும் உரிமை மறுக்கப்படுகின்ற போது வேலி போட்டுகொண்டு வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் மீது பயங்கரவாதம் என்ற முத்திரை எளிதாக குத்தப்பட்டுவிடுகிறது

அரச பயங்கரவாதம் என்பது சட்ட ஒழுங்காய் பரிணாமம் பெறுகையில் "மூச்சு"விடுவது கூட "புரட்சி குரல்" என்று வியாக்கியானப்படுகிறது.  

Thursday, February 09, 2012

நீரும் தமிழரும் – 4


இனிவரும் பகுதிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை காண்போம்! ஆங்காங்கே பழந்தமிழர் தம் அறிவையும் நம் தவறுகளுக்கு மாற்றாக அவர்கள் கைகொண்ட எளிய முறைகளையும் காணலாம்! அதை செய்! இதை செய்! என்ற அறிவுரைகள் இருக்காது. தவறுகள் இருக்கும், அதன் விளைவுகள் இருக்கும்.ஓர்ந்து பார்த்து செய்யவேண்டியதை முடிவு செய்து செய்யவேண்டியது அவரவர் விருப்பம். பழம்பெருமைகள் இருக்காது என்பதால் பதிவுகளின் சுவையாரம் குறையலாம்! ஆனால் பழம்பெருமை பேசிப்பேசி வெறும் பேச்சோடு நின்றுவிடுகிறோமே! செயல்படுவது யார்? செயல்படாதிருந்தால் நம் பெருமை யார் பேசுவார்?

நீரும் தமிழரும் – 3


சென்ற பதிவில், நதி நீரில் தமிழர் தம் அறிவியல் பார்த்தோம். இங்கு நீரில்லா தமிழர்களின் வாழ்வியல் பார்க்கலாம். அதென்ன நீரில்லா தமிழர்கள்? அக்கால தமிழகத்திலுமா நீருக்கு குறைவு ? காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தமிழ் கண்டதோர் வைகை, என மேவி ஓடிய ஆறுகளின் பூமியில் தண்ணீர் இல்லையா? என்ன உளறல் இது? உளறல் அல்ல! உண்மையே!  ஆம், தமிழர் நிலப்பரப்பு ஒன்றும் பஞ்சமே காணாத பூமியல்ல! இங்கும் பஞ்சங்கள் வந்ததுண்டு, ஆனால் அதை தம் அறிவால் வென்றவர்கள் தமிழர்கள்.
“கடலருகே வீற்றிருந்தும் கடுந்தாகம் வரும்பொழுதே
கடவுளெனும் ஒருவனது கைசரக்கு நினைவுவரும்…
……கடல் நீரே குடிநீராய் கடவுளவன் படைத்திருந்தால் 
அடிநீரை தேடி எந்த அரசாங்கம் செலவு செய்யும்
இந்த வரிகளுக்கு சொந்தகாரர் கண்ணதாசன்! நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வரிகள் இவை.

நீரும் தமிழரும் – 2


சென்ற பதிவில் நீர் வழி பாதைகளில் ஒரு விஞ்ஞானம் இருந்ததாக கூறினேன் அல்லவா? அது என்னவெனில் ஒவ்வொரு ஏரி, கண்மாய் , மற்றும் குளங்களில் (அதாவது நீரை தேக்கி வைக்கும் இடங்களில் ) நீர் துறை என்ற ஒன்று இருக்கும், அதன் வழியாகவே நீர் அடுத்த இடத்திற்கு ஓடும்! அப்படிப்பட்ட துறைகளில் மதகு வைத்து அடைப்பார்கள்(நீரை தேக்கி வைக்க). இந்த மதகுகளில் தான் ஒரு விஞ்ஞானம் இருந்தது. கடைமடை பகுதிகளுக்கும் நீர் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த முறை பயன்படுத்தப்பட்டது.

நீரும் தமிழரும் – 1


தண்ணீர்! தமிழர்! இரண்டும் உருவான காலந்தொட்டே தொடர்புடைய வார்த்தைகள். நீரே நம் வாழ்விடங்களை தீர்மானித்திருக்கிறது, நம் வாழ்க்கை  முறைகளை தீர்மானித்திருக்கிறது. இன்றைய நிலையில் நம் எதிர்காலத்தையும் தீர்மானிக்கவிருக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நீருக்கு தமிழர்களாகிய நாம் எத்தகைய கவனம் அளித்திருக்கிறோம்/அளித்திருக்கவேண்டும் என்பதை பற்றித்தான் இனி வரும் பத்திகளில் பார்க்கப் போகிறோம்.(நீர் பற்றிய சமகால அரசியல் சூழலோ,மொழி வாரி வஞ்சனைகளின் ஆராய்ச்சியோ இல்லாது, தண்ணீர் மீதான தமிழர்களின் கடந்த/சம/எதிர்கால ஆளுமைகள் பற்றிய சுயபரிசோதனை மட்டுமே இந்த பதிவின் நோக்கம்)

சமூக வலைதளங்களில் காமம்-விபச்சாரம் எனும் பழந்தொழில் - ஒரு அலசல்


ஒரு கருத்து மோதல்!என் பதிவுலக நண்பர்களுடன்! எது பற்றி? காமம் பற்றி ! காமத்தை கீச்சர்(Twitter),முகநூல்(Facebook) போன்ற சமூக வெளிகளில்  அப்பட்டமாக எழுதலாமா என ?! அப்படி எழுதுவதால் பெண்கள் குறிப்பாக பதிவுலகில் வாழும் பெண்கள் நேரடியாக ஆண்களால் தரக்குறைவாக பார்க்க/கேட்கப் படுகிறார்கள் என்பது குற்றச்சாட்டு. இதன் விளைவாக எழுந்த கருத்து பரிமாறல்கள் மெல்ல திசை மாறி, விபச்சாரம் பற்றி திரும்பியது.இதில் விபச்சாரம் என்பது ஒழிக்கப்படவேண்டும் என்றும், பெண்ணின் உடலை ஒரு வியாபார பொருளாக பாவிக்கும் அவலம் மாற வேண்டும் எனவும், பெண்ணை சக உயிராக பாவிக்க வேண்டுமே அன்றி காம இச்சைக்கான ஒரு பொருளாக பார்க்க கூடாது என்றும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த கருத்து வரையில் எனக்கும் உடன்பாடுதான்! ஆனால் இன்னும் சில கருத்துக்கள் மொழியப்பட போய்த்தான் இப்படி ஒரு பதிவை நான் எழுதவும் நீங்கள் படிக்கவும் வேண்டியதாகிவிட்டது.

சில்லரை வணிகம்-உள்குத்துகள்


இதை ஏன் எதிர்க்கிறார்கள்.கொஞ்சம் பாக்கலாமா? வாங்க.,
முதல் பதிவில் சொன்ன அமைப்புசாரா தொழில்,அதுதாங்க நுகர்வு சங்கிலி,இதை ஒட்டுமொத்தமா சில்லரை வணிகம் அழிச்சிடும்,அப்படின்னு குற்றச்சாட்டு,அது உண்மையா அப்படின்னா? இல்ல,அழிக்காது,ஆனா வலுவிழக்க செய்யும். சரி இந்த வணிகர்கள் சங்கம் இத ஏன் இவ்வளவு வலுவா எதிர்க்கிறாங்கன்னா,வணிகர் சங்கங்களை பொருத்தவரை முக்குகடை அண்ணாச்சி கூட அதுல உறுப்பினரா இருந்தாலும்,பொறுப்புல இருக்குற எல்லாரும் அந்த இரண்டாவதா சொன்ன இடைத்தரகர்கள் தான்.அடி மடியில் நேரா கைய்ய வச்சா கத்த மாட்டாங்களா என்ன? அப்படி ஒரு பிரிவையே இந்த பேரங்காடிகள்(walmart மாதிரி கடைகள்) ஒழிச்சிடும்.இது உடனடி நிகழ்வா இருக்கும்.அதுனாலதான் இவ்ளோ சத்தம். அதுக்காக நல்லதுதானே என்று நினைக்காதீங்க,படிப்படியா என்ன நடக்கும்னு யோசிச்சா பயமா இருக்கும்(முல்லை பெரியாறு உடைந்தா என்னவெல்லாம் நடக்கும்னு சேட்டன்கள் போடுற பட்டியல விட கிலியேற்படுத்தும்) ஆனா அது எல்லாம் நடக்கலாம். அனுமானம்தான்.நடக்கலாம்.

சில்லரை வணிகம்-அப்படின்னா என்ன?


சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு! இன்று இந்திய எல்லைக்குள் ஒரு உள் நாட்டு கழகத்தையே ஏற்படுத்தி இருக்கும் விடயம். இதில் அப்படி என்னதான் இருக்கு? கொஞ்சம் பார்ப்போம்.
முதலில் சில்லரை வணிகம் அப்டின்னா என்ன?
அதான் பேருலயே இருக்கே,அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள்,மொத்தமா கொள்முதல் செய்து வைக்க முடியாம அப்ப அப்ப வாங்க கூடிய பொருட்களுக்கான சந்தை.